‘‘மண்ணில் புதைந்திருந்த ஈசன்…
6 மணி நேரத்தில் நிகழ்ந்த பேரதிசயம்!
“நாம் என்ன செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? என்பதை ஈசன் எம்பெருமானும்,ஜகத்குரு ஸ்ரீமஹாபெரியவாவும் முடிவு செய்கிறார்கள்..நாம் செய்ய வேண்டியது ஒன்றே — இறைவன் கைங்கர்யத்திற்கான முதல் அடியை எடுத்து வைப்பது!”
🌿 கள்ளிமேடு ஒரு சிறிய கிராமம்..!
கும்பகோணம், வலங்கைமான் அருகே அமைந்துள்ள சிறிய கிராமம் கள்ளிமேடு…அந்த ஊரைச் சேர்ந்த சிலர் “நித்தியமும் கைங்கர்யம்” பற்றி கேள்விப்பட்டு நம்மை அழைத்திருந்தார்கள்.
மேலபூண்டி அருகே கள்ளிமேடு கிராமம் இருந்ததால், அங்குள்ள ஆலயத்தையும் வந்து பார்க்கும்படி அழைத்தார்கள் கைங்கர்யப் பணிகளை முடித்துவிட்டு நாம் கள்ளிமேடு சென்றபோது…மாலை 4.00 மணி

