Skip to content
🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை. ✨ பணிவு மனிதனின் உயர்ந்த ஆபரணம். 🕊️ அகந்தையை விடு; அமைதியை பெறு. 📿 தர்மம் காக்கும் மனிதனை தர்மமே காக்கும். 🌿 ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயல் செய்யுங்கள். 💛 இறைவனை நம்பு; உன் கடமையை நேர்மையாக செய். 🌼 மனம் தூய்மையாக இருந்தால் வாழ்க்கை ஒளிமயமாகும். 🪔 அமைதியான மனமே உண்மையான செல்வம். 📖 கடமை செய்; பலனை இறைவனிடம் ஒப்படை. 🤲 நல்ல வார்த்தை பேசுவது கூட ஒரு தானம். ❤️ பிறரின் மகிழ்ச்சியில் மகிழ்வதே உயர்ந்த ஆனந்தம். 🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை.்

வஸ்திர தானம்

நித்தியமும் கைங்கர்யம்

மரியாதையையும் மனிதநேயத்தையும் அர்ப்பணிக்கும் தர்ம சேவை

வஸ்திர தானம் என்பது தேவையுள்ளவர்களுக்கு ஆடைகளை வழங்குவதோடு மட்டுமல்ல, அவர்களின் கௌரவத்தையும் பாதுகாக்கும் ஒரு உயர்ந்த தர்மம். இது கருணை, பகிர்வு மற்றும் மனிதநேய உணர்வுகளை வளர்த்து, சமுதாயத்தில் அன்பும் ஒற்றுமையும் மலரச் செய்கிறது.

குருபாத அருளோடு செய்யப்படும் வஸ்திர தானம், தானத்தை கைங்கர்யமாக மாற்றி, அகந்தையற்ற சேவையாக வாழ்வில் நிலைநிறுத்துகிறது. பிறரின் வாழ்வில் சிறிய நிம்மதியை ஏற்படுத்தும் இந்த தர்மம், தானம் செய்பவரின் உள்ளத்திலும் ஆன்மீக நிறைவையும் அமைதியையும் தருகிறது. 🙏








“வஸ்த்ரம் ததாதி யோ நித்யம் ஸ புண்யம் லபதே நர: தர்மகார்யேஷு யுக்தஸ்ய தஸ்ய ஜீவிதம் மங்களம் ”
ஆலயங்களில் நித்ய பூஜை, நைமித்திக பூஜை, ஹோமம், வேத பாராயணம், மந்திர ஜபம், உற்சவங்கள் மற்றும் பல்வேறு வைதீக கைங்கர்யங்களைச் செய்து, இறைவனுக்கும் பக்தர்களுக்கும் இடையே ஆன்மிகப் பாலமாக விளங்குபவர்கள் அர்ச்சகர்கள், வைதீகர்கள் மற்றும் கிராம பூசாரிகள். அவர்களின் திருக்கரங்களால் நடைபெறும் பூஜை, அர்ச்சனை, அபிஷேகம், தீபாராதனை, வேத கோஷம் ஆகியவற்றின் மூலம் நமது ஆலயங்களும், கிராம தெய்வ வழிபாடுகளும் தொடர்ந்து உயிர்ப்புடன் இருந்து வருகின்றன. அத்தகைய ஆச்சார்யர்கள், அர்ச்சகர்கள், வைதீகர்கள், கிராம பூசாரிகள் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, “நித்தியமும் கைங்கர்யம்” சார்பாக வஸ்திர தான கைங்கர்யம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





நித்தியமும் கைங்கர்யம் மேற்கொள்ளும் ஒவ்வொரு சேவையும், தனிப்பட்ட புகழுக்காகவோ, பிரதிபலன் எதிர்பார்த்தோ அல்ல. “ஈஶ்வரார்ப்பணம்” என்ற பாவனையுடன் செய்யப்படும் சிறிய சமர்ப்பணமே எங்களது நோக்கம். ஆலய அர்ச்சகர், வைதீகர், கிராம பூசாரி என இறை கைங்கர்யத்தில் ஈடுபடும் ஒவ்வொருவரும் நமது மரியாதைக்கும் ஆதரவிற்கும் உரியவர்கள். அவர்களின் திருக்கரங்களில் பூஜை தொடரட்டும்; ஆலயங்களில் மந்திர கோஷம் ஒலிக்கட்டும்; தீபங்கள் நித்யம் ஏற்றப்படட்டும்; சனாதன தர்மம் தலைமுறை தலைமுறையாகத் தழைக்கட்டும். அத்தகைய புனிதமான நோக்கத்துடன், நித்தியமும் கைங்கர்யம் சார்பாக வஸ்திர தான கைங்கர்யம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. “ஆலய கைங்கர்யம் – அர்ச்சகர் மரியாதை – தர்மப் பாதுகாப்பு” இதுவே எங்களது பணிவான சமர்ப்பணம்.